தேசிய செய்திகள்

‘தனிமைப்படுத்த எங்கள் மாநிலம் வாருங்கள்’ - இமாசல் முதல்-மந்திரி அழைப்பு; காங்கிரஸ் எதிர்ப்பு

தனிமைப்படுத்த எங்கள் மாநிலம் வாருங்கள் என்று கூறிய, இமாசல் முதல்-மந்திரி அழைப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக இல்லை.

இந்த நிலையில் டி.வி.யில் தோன்றிப் பேசிய முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், கொரோனா வைரசுக்கு எதிராக தனிமைப்படுத்திக்கொள்வதற்கு இந்த தருணத்தில் ஏற்ற மாநிலம் தங்களது மாநிலம் என கூறி, மக்களை அங்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இது மாநிலத்தில் சுற்றுலா மேம்பட உதவும் என அவர் கருதி இந்த அழைப்பை விடுத்தார்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்-மந்திரியின் அழைப்பை சிம்லா ஓட்டல் மற்றும் உணவு விடுதிகள் சங்கமும் ஏற்கவில்லை. இது வழக்கமாக இமாசலபிரதேசம் சுற்றுலா வருபவர்களை தடுத்து நிறுத்தி விடும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சஞ்சய் சூத் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து