தேசிய செய்திகள்

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாது

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக குறைந்த தொகுதிகளையே கைப்பற்றியது. இந்த நிலையில், அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவரான நதீம் ஜாவித் கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய அளவில் இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாது என கூறினார்.

ஆனால் மாநில அளவில் இப்தார் விருந்து நடைபெறும். கடந்த வாரம் டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் தலைமையில் இப்தார் விருந்து நடந்தது.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி தலைமையில் கடந்த வருடம் டெல்லியில் உள்ள பிளஷ் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இந்த வருடம் இப்தார் விருந்து நடைபெறாமல் போனதற்கு மக்களவை தேர்தல் முடிவு ஒரு காரணம் என காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்