தேசிய செய்திகள்

கடலோர காவல் படை நிறுவிய தினம் பிரதமர் மோடி வாழ்த்து

கடலோர காவல் படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #NarendraModi #India

புதுடெல்லி,

கடலோர காவல் படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்திய கடலோர காவல் படைக்கு வாழ்த்துக்கள். இந்திய கடலோர காவலர்கள் தேசத்தை பாதுகாத்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு மட்டுமின்றி கடல்சார் வளத்தை பாதுகாப்பதிலும் இந்திய கடலோர காவல்படை சிறந்து உதவுகிறார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.