எரிபொருள் விலையேற்றம்; மத்திய அரசை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்!
டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
புதுடெல்லி,
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.