தேசிய செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? ராகுல்காந்தி கேள்வி

ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் ராகுல்காந்தி எம்.பி., பேசியதாவது:-

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் மகளிருக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்காதது வருத்தமளிக்கிறது.

ஓபிசி இடஒதுக்கீட்டின் படி நாடாளுமன்றம், சட்டமன்றம் நீதித்துறைகளில் கடைபிடிக்க முடிகிறதா? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? அதானியின் முறைகேடுகளை மறைக்க பாஜக வெவ்வேறு உத்திகளை கையாள்கிறது. ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது என்றார்.

ராகுல்காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பிக்கள் முழுக்கம் எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது