இந்தநிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
370-வது பிரிவு பற்றிய நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் தலைமை ஒரு நாளுக்கு மேல் மவுனம் சாதித்து வருகிறது. திக்விஜய்சிங் சூசகமாக தெரிவித்தபடி, 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறதா? மவுனமாக இருக்க வேண்டிய நேரம் முடிந்துவிட்டது. உங்கள் தெளிவான நிலைப்பாட்டை விளக்குங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.