இந்த உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி நிறைவு அடையும். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், வார்டுகளிலும், கிராமங்களிலும் சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
முதல்முறை வாக்காளர்களை கட்சியில் உறுப்பினர்கள் ஆக்குவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் நவம்பர் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.