தேசிய செய்திகள்

விநாயகா சதுர்த்தியையொட்டி பெங்களூரு-உப்பள்ளி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

விநாயகா சதுர்த்தியையொட்டி பெங்களூரு-உப்பள்ளி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் சில ரெயில்கள் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

* எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கே.எஸ்.ஆர். பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 07339) வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (07340) வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கே.எஸ்.ஆர். பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் (12079/80) வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

* யஸ்வந்தபுரம்-வாஸ்கோடகாமா தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17309) வருகிற 14-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை ஏ.சி. வசதி கொண்ட மூன்று அடுக்கு பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

* வாஸ்கோடகாமா-யஸ்வந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17310) வருகிற 13-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை ஏ.சி. வசதி கொண்ட மூன்று அடுக்கு பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்