தேசிய செய்திகள்

திருமழிசையை புதிய நகராக மேம்படுத்த பரிசீலனை: மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

திருமழிசையை புதிய நகராக மேம்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில், தமிழ்நாட்டில் திருமழிசையை புதிய நகராக மேம்படுத்தும் திட்டம் ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி கவுசல் கிஷோர் கூறியதாவது:-

நகர்ப்புறங்களை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவைக்காக புதிய நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுகள் கோரிக்கைகள் அளிக்க கடந்த ஜனவரி 20-ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

21 மாநிலங்களிடம் இருந்து 26 நகரங்களை புதிய நகரங்களாக மேம்படுத்தும் கோரிக்கைகள் வரப்பெற்றன. அவை மத்திய அரசின் ஆய்வில் இருக்கின்றன. இவற்றில், உத்தரபிரதேசத்தில் அயோத்தி, தமிழ்நாட்டில் திருமழிசை ஆகியவையும் அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்