தேசிய செய்திகள்

ஒப்புதல் கோரி அயோத்தி மசூதிக்கான கட்டுமான திட்ட வரைபடம் தாக்கல்

மசூதி கட்டுவதற்கு ஒப்புதல் கோரி அயோத்தி மசூதிக்கான கட்டுமான திட்ட வரைபடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அயோத்தி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக தானிபூர் கிராமத்தில் உத்தரபிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தது.

அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு ஒப்புதல் கோரி, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் மசூதி கட்டுமான திட்ட வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய-இ்ஸ்லாமிய கலாசார அறக்கட்டளை உறுப்பினர் அப்சல் அகமதுகான் அதை அதிகாரிகளிடம் அளித்தார். பரிசீலனை கட்டணமாக ரூ.89 ஆயிரம் செலுத்தினார்.

ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமரும்வகையில் மசூதி கட்டப்படுகிறது. இந்த திட்டத்தில், 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, சமுதாய சமையல் கூடம், ஆராய்ச்சி மையம் ஆகியவையும் கட்டப்படுகின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்