ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் எஸ்.எம்.எச்.எஸ் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவனைக்கு இன்று பயங்கரவாதி ஒருவனுக்கு சிகிச்சை அளிக்க போலீசார் அழைத்து வந்தனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியை போலீஸ் பிடியில் இருந்து தப்ப வைக்க சதித்திட்டம் தீட்டியிருந்த பயங்கரவாதிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் போலீஸ் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சூழலை பயன்படுத்தி, பாகிஸ்தான் பயங்கரவாதி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினான். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயம் படைந்த ஒரு போலீஸ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச்சூடு நடத்தி, போலீஸ் பிடியில் இருந்து பயங்கரவாதியை தப்ப உதவிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் ரைபிள் ஒன்றையும் பயங்கரவாதி எடுத்துச்சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய பாதுகாப்பு படையினர், தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.