தேசிய செய்திகள்

தொழிற்சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு குழு - தொழிற்சங்கங்களுக்கு மராட்டிய முதல்வர் வலியுறுத்தல்

தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு குழுவை அமைக்க மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த அந்த மாநில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழிலாளர்களிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசுகையில், தொற்றுநோயால் தொழில்துறை உற்பத்தி மற்றும் வர்த்தகம் தடைபடாமல் இருக்கவும், பொருளாதார சுழற்சி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுடன் தொழிலாளர்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் முக்கி பங்கு வகிக்கின்றனர். தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு குழுவை அமைக்க தொழிற் சங்ககளை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு