தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: மம்தா பானர்ஜி பேட்டி

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் பரவலாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டன. இதனால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கின. தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தின.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் முன் இன்று கூறும்போது, பிற மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தின. ஆனால் நாங்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளையே விதித்தோம்.

பொதுமக்களும் அதற்கு ஆதரவு அளித்தனர். இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள உணவு விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரை உணவு விடுதிகள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்