தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதல்-மந்திரிக்கு கொரோனா பரிசோதனை

ஜார்கண்ட் முதல்-மந்திரிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி மைலேஷ் தாகூர், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ. மதுரா மகாதோ ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சக மந்திரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், கடந்த 8-ந்தேதியில் இருந்து முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்தநிலையில் அவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது மனைவி கல்பனா சோரன், ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத், மூத்த தனி செயலாளர் சுனில்ஸ்ரீனிவாஸ் மற்றும் முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்