தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. ஒடிசாவில் உயிரிழப்பு

ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. உயிரிழந்து உள்ளார்.

புவனேஸ்வர்,

நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருந்தவர் ரகுநாத் மொகபத்ரா. கடந்த வாரம் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் இவரை ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து உள்ளார். அவர் நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர் ஆவார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்