தேசிய செய்திகள்

ராஜஸ்தான் வந்த இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ராஜஸ்தான் வந்த இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

இத்தாலியை சேர்ந்த ஒருவர் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்திருந்தார். இங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 29-ந் தேதி கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நோய் தொற்று எதுவும் இல்லை என தெரியவந்தது.

ஆனாலும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே நேற்று மீண்டும் வைரஸ் தொற்று பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு 2 பரிசோதனையிலும் வெவ்வேறு முடிவுகள் கிடைத்ததால், வைரஸ் பாதிப்பை உறுதி செய்வதற்காக அவரது ரத்த மாதிரி நேற்று புனேயில் உள்ள தேசிய வைரஸ் பரிசோதனை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இத்தாலி சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு