கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

கொரோனா பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. 3-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கை ஆகஸ்டு 1-ந்தேதி வரை நீட்டித்து மாநில தலைமைச்செயலாளர் மொகபத்ரா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தொற்று பரவலை அடிப்படையாக கொண்டு 2 பிரிவாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சலூன் கடைகளும், அழகுநிலையங்களும் திறக்க ஒடிசா மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதேசமயம் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்