தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சர்வதேச கொரோனா வைரஸ் குறும்பட விழாவில் பேசிய அவர், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் கிடைக்கும். தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படுவதற்கும் முன்பாக தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு இந்தியா தயாராகி வருவதால், மத்திய சுகாதார அமைச்சகம் அதன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை