தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்தது போலந்து

2 டோஸ்களையும் எடுத்துக் கொண்ட இந்தியர்கள், தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று போலந்து அறிவித்துள்ளது.

தினத்தந்தி

வார்சா,

போலந்து நாடு, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டை ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு சமமானதாக அங்கீகரித்தது. இதன் மூலம் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் பிற தடுப்பூசிகளை ஏற்குமாறு இந்தியா கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளை கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் போலந்து நாடு கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்து உள்ளது. இதன்மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்ட இந்தியர்கள், போலந்து நாட்டிற்கு செல்லும் போது தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்