தேசிய செய்திகள்

சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது

உப்பள்ளியில், சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

உப்பள்ளி;

உப்பள்ளி கேஷ்வாப்பூரில் ரெயில்வே விருந்தினர் மாளிகை வளாகத்தில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு ரெயில்வே விருந்தினர் மாளிகை வளாகத்தில் நின்றிருந்த 4 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் செட்டில்மெண்ட் கங்காதரா நகரை சேர்ந்த பக்கீரப்பா கட்டிமணி, அப்பண்ணா கட்டிமணி, மாருதி கட்டிமணி என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை