தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு...!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தமாதம் (மார்ச்) தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

ரூ.300 கட்டண தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இதுவரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை ஒரு நாளைக்கு கூடுதலாக 13,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

இதேபோல், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில், தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கூடுதலாக 5,000 டோக்கன் வினியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை