தேசிய செய்திகள்

கங்கை நதி கிளை கால்வாயில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு

கங்கை நதி கிளை கால்வாயில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

முசாபர்நகர்,

புனித நதியாக கருதப்படும் கங்கை நதி ஏராளமான கிளை ஆறுகளையும், கிளை கால்வாய்களையும் கொண்டது. இந்த நதியின் கிளை கால்வாய் ஒன்று உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் வழியாக செல்கிறது.

அந்த கால்வாயில் நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, செத்த மீன்களை மர்ம நபர்கள் லாரிகளில் எடுத்து வந்து இந்த கால்வாயில் வீசிச்சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். எனினும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு