தேசிய செய்திகள்

கர்நாடக பா.ஜனதா தலைவராக சி.டி.ரவியை நியமிக்க முடிவு?

கர்நாடக பா.ஜனதா தலைவராக சி.டி.ரவியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக மாநில பா.ஜனதா மாநில தலைவராக இருந்து வருபவர் நளின்குமார் கட்டீல். அவரது பதவிக்காலம் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய மாநில தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக இருக்கும் சி.டி.ரவி புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், புதிய தேசிய பொதுச்செயலாளராக பன்சல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே பா.ஜனதாவில் 8 பேர் பொதுச்செயலாளராக உள்ளனர். தற்போது பன்சலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சி.டி.ரவியிடம் இருந்து பொதுச்செயலாளர் பதவியை பறித்து விட்டு, நளின்குமார் கட்டீலின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய தலைவராக சி.டி.ரவி நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருப்பதால், ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த சி.டி.ரவி மாநில தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து