தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனி; 16 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கம்

டெல்லியில் கடும் பனியால் 16 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்படுகின்றன.

தினத்தந்தி

டெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் சாலைகளில் வாகனங்களில் செல்வோருக்கு தெளிவான பாதை தெரியாமல் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த கடும் பனிப்பொழிவால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து உள்ளனர்.

இதேபோன்று நகரின் பல பகுதிகளில் தீவிரமுடன் குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் முனிர்கா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பலர் இரவு நேர முகாம்களில் தஞ்சம் புகுந்து இரவு பொழுதினை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடும் பனி மற்றும் தெளிவற்ற வானிலையால் 16 ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்