புதுடெல்லி,
தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் அதிகாலை வேளைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் இதே நிலை நீடித்த நிலையில், ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
டெல்லியில் 49 ரயில்கள் தாமதமாகவும், 13 ரயில்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் அனைத்தும் மெதுவாக சென்றதை பார்க்க முடிந்தது. #delhi #fog