தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை: மனோகர் பாரிக்கரிடம் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரிடம், மத்திய உள்துறை மந்திரிராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கோவா மாநில முதல்மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். நேற்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை சந்தித்து அவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், மனோகர் பாரிக்கர் விரைவில் குணம் அடையவும், அவரது உடல் நிலை நலம் பெறவும் இறைவனை பிரார்த்திப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு