கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதலாக 1,400 வீரர்களை நியமிக்க ஒப்புதல்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதலாக 1,400 வீரர்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதாக சமீபகாலமாக சர்ச்சை எழுந்துள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 ஆயிரம் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, கூடுதலாக 1,400 வீரர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 3 முனையங்களில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. அப்பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பு பணியை கவனிப்பார்கள்.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு