தேசிய செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு: பயங்கரவாதிகள் 4 பேரின் காவல் விசாரணை மேலும் 10 நாள் நீட்டிப்பு

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 10-ந்தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் டாக்டர்கள் முசாமில் ஷகீல், அதீல் அகமது ராதர், ஷாகீன், சயீத், முப்தோ இர்பான் அகமது வாகே ஆகிய 4 பேரும் 10 நாள் காவல் விசாரணை முடிந்து நேற்று பட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது புலனாய்வு அதிகாரிகள் காவல் விசாரணையை மேலும் நீட்டிக்க மனு தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் மேலும் 10 நாள் காவல் விசாரணைக்கு நீதிபதி அனுமதித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரிகள் அந்த 4 பேரையும் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். சம்பவத்தின் சதித்திட்டத்தில் தொடர்புடைய 4 முக்கிய நகரங்களுக்கு பயங்கரவாதிகள் அழைத்துச் செல்லப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து