தேசிய செய்திகள்

கோர்ட்டில் கொரோனா நோயாளி ஆஜர்: தனிமையில் 2 நீதிபதிகள்

கோர்ட்டில் கொரோனா நோயாளி ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிபதிகள் இருவர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் திஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் ஒரு மாஜிஸ்திரேட்டு முன்பு கடந்த 6-ந் தேதி ஒருவர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையே, அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாஜிஸ்திரேட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருடைய மனைவி, சாகேத் மாவட்ட கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகிறார். அவரும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கிடையே, திஸ் ஹசாரி கோர்ட்டில் அவசர பணியில் ஈடுபடுவோரைத் தவிர, மற்ற ஊழியர்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்