image courtesy; ANI 
தேசிய செய்திகள்

டெல்லி; விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில், துபாயில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தல்காரர் தங்கத்தை உருக்கி பேஸ்ட் முறையில் கடத்தி வந்துள்ளார். அதனை அடுத்து, அவரிடமிருந்து 1,893 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.99.53 லட்சம் என தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்திலும் பயணி ஒருவர் 1.52 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்