புதுடெல்லி,
டெல்லியில் அடுத்த 2-3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று வெயில் அதிகமாக இருக்கும் எனவும் 44 டிகி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தொவித்துள்ளது. மேலும் வெப்பநிலை அதிகாப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என மஞ்சள் அலர்ட் எச்சாக்கை விடுத்து உள்ளது.
டெல்லியில் அதிகபட்சமாக, அக்சாதம் கோவிலுக்கு அருகில் உள்ள விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையத்தில் 46.7 டிகி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
நஜாப்கர், முங்கேஷ்பூர், பிடம்புரா மற்றும் ரிட்ஜ் ஆகிய வானிலை மையங்களில் முறையே 46.4 டிகிரி செல்சியஸ், 46.2 டிகிரி செல்சியஸ், 45.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஜீன் 15,16- ஆகிய தேதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் அதன்பின் குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொவித்து உள்ளது.