தேசிய செய்திகள்

டெல்லி: போலீஸ் கான்ஸ்டபிள் காருக்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காருக்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

புது டெல்லி,

டெல்லி காவல்துறையின் குற்றப் பிரிவு தலைமைக் காவலரான நரேந்திரன் என்பவர் ஷகர்பூர் காவல் காலனியில் தனது காரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஷகர்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு இன்று காலை 11:30 மணியளவில் நரேந்திரன் வந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்காக துப்பாக்கியை குற்றப் பிரிவு அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளார்.

குடும்பப் பிரச்னையால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி காவல்துறையில் சேர்ந்த நரேந்திரன் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்