தேசிய செய்திகள்

டெல்லியில் 5,277 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் நடப்பு ஆண்டில் 5,277 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொசுக்களால் பரவ கூடிய இந்த காய்ச்சல் பாதிப்புக்கு முதன்முறையாக கடந்த மாதம் 18ந்தேதி ஒருவர் பலியானார். இதனால், சுகாதார பணிகளை அரசு நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தெற்கு டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியில் நடப்பு ஆண்டில் 5,277 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் கடந்த வாரத்தில் 2,569 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என பதிவாகி உள்ளது. இதுவரை 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்