தேசிய செய்திகள்

விஜயவாடாவுக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு

விஜயவாடாவுக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 50 பயணிகளுடன் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் சென்றபோது, திடீரென்று கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். விமானத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...