தேசிய செய்திகள்

பெங்களூரு மாநகராட்சியில் கர்நாடக சட்டசபை தொகுதி வாரியாக வார்டுகள் எண்ணிக்கை விவரம்

பெங்களூரு மாநகராட்சியில் கர்நாடக சட்டசபை தொகுதி வாரியாக வார்டுகளின் விவரம் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

அரசாணை பிறப்பித்தது

பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்த 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை கர்நாடக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது. பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளில் இடம் பெற்றுள்ள வார்டுகளின் விவரம் வருமாறு:-

எலகங்கா தொகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 5 ஆகவும், கே.ஆர்.புரத்தில் 9-ல் இருந்து 13 ஆகவும், பேடராயனபுராவில் 7 வார்டுகளில் இருந்து 10 ஆகவும், யஷ்வந்தபுராவில் 5 வார்டுகளில் இருந்து 8 ஆகவும், ராஜராஜேஸ்வரிநகரில் 9-ல் இருந்து 14 ஆகவும், தாசரஹள்ளியில் 8-ல் இருந்து 12 ஆகவும், மகாலட்சுமி லே-அவுட்டில் 7-ல் இருந்து 9 ஆகவும் வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

ராஜாஜிநகர்

புலிகேசிநகர், ஹெப்பால், சாந்திநகர், காந்திநகர், ராஜாஜிநகர், சிக்பேட்டை, மல்லேஸ்வரம் ஆகிய 7 தொகுதிகளில் வார்டுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த தொகுதிகளில் ஏற்கனவே இருந்து வார்டுகளே இருக்கின்றன. சர்வக்ஞநகர் தொகுதியில் 8-ல் இருந்து 10 ஆகவும், சி.வி.ராமன்நகர் தொகுதியில் 7-ல் இருந்து 10 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சிவாஜிநகரில் 7 வார்டுகள் இருக்கும் நிலையில் அதில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. கோவிந்தராஜ்நகரில் 9-ல் இருந்து 10 ஆகவும், விஜயநகரில் 8-ல் இருந்து 9 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சாம்ராஜ்பேட்டை தொகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளன. பசவனகுடியில் 6-ல் இருந்து 7 ஆகவும், பத்மநாபநகரில் 8-ல் இருந்து 10 ஆகவும், பி.டி.எம். லே-அவுட்டில் 8-ல் இருந்து 9 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாற்றம் செய்யவில்லை

ஜெயநகரில் வார்டுகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மகாதேவபுராவில் 8-ல் இருந்து 13 ஆகவும், பொம்மனஹள்ளியில் 8-ல் இருந்து 14 ஆகவும், பெங்களூரு தெற்கில் 7-ல் இருந்து 12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனேக்கல் ஒரே வார்டு உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து