லக்னோ,
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 3 மாநிலங்களிலும் காலை 9 மணி வரை பதிவான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடர்பான விவரத்தை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி, கோவாவில் 11.04 சதவீத வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 9.45 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 5.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.