தேசிய செய்திகள்

உ.பி., உத்தரகாண்ட், கோவா தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

லக்னோ,

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 3 மாநிலங்களிலும் காலை 9 மணி வரை பதிவான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடர்பான விவரத்தை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி, கோவாவில் 11.04 சதவீத வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 9.45 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 5.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது