தேசிய செய்திகள்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

சபரிமலை,

சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலையில் தினசரி 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சபரிமலையில் மண்டல பூஜை வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலின் வருவாய் 50 கோடியை தண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு