தேசிய செய்திகள்

மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் - மத்திய கல்வி மந்திரி தகவல்

கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் மத்திய கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா காலத்தில் கல்வி கற்பிப்பதற்காக, பி.எம். இ-வித்யா, தேசிய மின்னணு கல்வி கட்டமைப்பு போன்ற மின்னணு முயற்சிகள் பின்பற்றப்பட்டன. இவற்றின் முன்னேற்றம் குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக, மின்னணு கல்வி முறைக்கு மாற வேண்டியதாகி விட்டது. இந்த கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும். நிறுவனமயமாக்கப்படும். துடிப்பான மின்னணு கல்வி முறைகள், மாணவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்