தேசிய செய்திகள்

சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு 3 நாட்கள் நீதிமன்றக் காவல்

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து டூல்கிட்டை பகிர்ந்த திஷா ரவி கைது கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு எதிராக சதி மற்றும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 நாள் போலீஸ் காவலில் திஷா ரவி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திஷா ரவி இன்று ஆஜர்படுத்தட்டார்.

வழக்கு தொடர்பான ஆதாரங்களை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளதால் திஷா ரவிக்கு எதிரான நீதிமன்றக்காவலை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து, திஷா ரவியின் 3 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு