தேசிய செய்திகள்

டெல்லியில் மாவட்டம் தோறும் மாதிரி பூங்காக்கள் - சுற்றுசூழல் மந்திரி கோபால் ராய் அறிவிப்பு

டெல்லியில் மாவட்டம் தோறும் மாதிரி பூங்காக்கள் அமைக்கப்படும் என டெல்லி சுற்றுசூழல் மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்றுமாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு மாவட்டங்கள் தோறும் பூங்காக்களை மறுவடிவமைப்பு செய்வது குறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டெல்லியில் உள்ள சுமார் 16,828 பூங்காக்களை மறுவடிவமைப்பு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் கோபால் ராய், டெல்லியின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பூங்கா முன் மாதிரி பூங்காவாக மாற்றப்படும்.

மேலும் பல பூங்காக்கள் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்றும் கூறினார். இவ்வாறு உருவாக்கப்படும் முன்மாதிரி பூங்காக்களில் நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி ஜிம்கள், நீரூற்றுக்கள் மற்றும் வைஃபை வசதிகள் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்