புதுடெல்லி:
சீனா-பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பின் போது ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு "ஒருதலைப்பட்ச" நடவடிக்கையையும் எதிர்ப்பதாக சீனா பாகிஸ்தானிடம் கூறியது.
இதற்கு ஒருநாள் கழித்து இந்தியா இந்தியா சீனா,பாகிஸ்தான் இரு நாடுகளையும் கண்டித்ததுடன் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தியது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்கமுடியாத பகுதி என்று வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) மீண்டும் கூறியது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-
கடந்த காலங்களைப் போலவே, சீனா-பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளின் மூலோபாய உரையாடலின் 2 வது சுற்று கூட்டு செய்திக்குறிப்பில் ஜம்மு-காஷ்மீர் பற்றிய குறிப்பை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். ஜம்மு-காஷ்மீர் ஒரு ஒருங்கிணைந்த &இந்தியாவின் மாற்ற முடியாத பகுதி. "
இந்தியாவின் உள் விவகாரங்களில் சயாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறி உள்ளார்.