தேசிய செய்திகள்

’திறன்களை வளர்க்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், அதற்கு அடிமையாகாதீர்கள்’ - பிரதமர் மோடி

சிலர் மொபைல் போன் இல்லாமல் உணவுக்கூட சாப்பிட முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக கவலை தெரிவித்தார்.

புது டெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ‘பரீட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடில் மாணவர்களுடன் உரையாடி, தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் அதை தங்களின் திறன்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

சில குழந்தைகள் மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி இல்லாமல் உணவுக்கூட சாப்பிட முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக கவலை தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், அவற்றை தங்களின் திறன்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முந்தைய வினாத்தாள்களை பயிற்சி செய்யவும், போதுமான தூக்கம் பெறவும் அவர் பரிந்துரைத்தார்.

தலைமைத் தன்மை குறித்து பேசும்போது, “தலைமை என்பது தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல. குறைந்தது 10 பேருக்கு உங்கள் எண்ணங்களை தெளிவாக எடுத்துச் சொல்லும் திறனே ஒரு முக்கிய தலைமை பண்பு,” என தெரிவித்தார். இந்த உரையாடல் கோயம்புத்தூர், ராய்ப்பூர், கவுகாத்தி மற்றும் குஜராத் இடங்களில் நடந்தது.