தேசிய செய்திகள்

தென்கொரியா மற்றும் வங்காளதேசத்தில் தடம் பதிக்கும் தூர்தர்ஷன் இந்தியா சேனல்

தென்கொரியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தூர்தர்ஷன் இந்தியா தொலைக்காட்சி சேனல் தடம் பதிக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, வங்காளதேசத்துடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு தொலைக்காட்சியில் தூர்தர்சன் இந்தியா சேனல் தெரியும்.

இதேபோன்று இந்தியாவில் வங்காளதேச நாட்டின் அதிகாரப்பூர்வ சேனலும் தெரியும்.

தென்கொரியா நாட்டுடனும் நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதன்படி, தென்கொரியா நாட்டில் தூர்தர்சன் இந்தியா சேனல் தெரியும். பதிலுக்கு தென்கொரியாவின் கே.பி.எஸ். சேனல் நம் நாட்டில் தெரியும். அண்டை நாடுகளுடன் இதுபோன்ற இருதரப்பு ஒத்துழைப்பு மிக அவசியம் என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்