தேசிய செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறும் போலீசாருக்கு இரட்டிப்பு அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறும் போலீசாருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி புதிய சட்டத்திருத்தம் கடந்த 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம் மற்றும் தண்டனைகளை விட பல மடங்கு அதிகமாக அபராதம், தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி ஓ.பி.சிங் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் போலீசார் அலுவலகப்பணியின் போதோ அல்லது சொந்த வேலையின் போதோ வாகனங்களை பயன்படுத்தும்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் புதிய சட்டத்திருத்தத்தின்படி அவர்களுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்