தேசிய செய்திகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக ராஜீவ் பாஹல் நியமனம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய தலைவராக டாக்டர் ராஜீவ் பாஹல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைவராக டாக்டர் பலராம் பார்கவா பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்று விட்டார்.

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய தலைவராக டாக்டர் ராஜீவ் பாஹல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உலக சுகாதார அமைப்பில் பச்சிளம் சிசு மற்றும் இளம்பருவ ஆரோக்கியம் மற்றும் முதுமைத் துறையில் பச்சிளம் சிசு, இளம்பருவ ஆரோக்கியம் மற்றும் முதுமை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக இவரை நியமிப்பதற்கு நியமனங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்