தேசிய செய்திகள்

ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலி

ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் மின்வாரிய ஊழியராக இருந்து வந்தவர் மகேஷ்கவுடா (வயது 40). இவர், குப்பி அருகே திப்தூரில் ஏரிக்கு நடுவே இருந்த மின்கம்பத்தில் பழுதான மின்வயரை சரி செய்ய சென்றார். மழை காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

இதன் காரணமாக நீச்சல் அடித்தபடியே ஏரிக்குள் சென்று மின்வயரை சரி செய்துவிட்டு, மீண்டும் கரைக்கு திரும்பினார். ஆனால் மகேஷ்கவுடாவால் நீச்சல் அடிக்க முடியாமல் போனதால், ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். அவரை காப்பாற்ற கிராம மக்கள் முயற்சித்தும் முடியாமல் போனது. இதுகுறித்து திப்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து