தேசிய செய்திகள்

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்.

தினத்தந்தி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாந்தேஷ் (வயது 9) மற்றும் விஜய் (9). இவர்கள் 2 பேரும் வீட்டில் உள்ள மாடுகளை அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு அழைத்து சென்றனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மேலும் 2 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து மாடுகளை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென குட்டையின் ஆழமான பகுதிக்கு அவர்கள் 4 பேர் சென்றதாக கூறப்படுகிறது. இதில் மகாந்தேஷ் மற்றும் விஜய் ஆகிய 2 பேர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்ற 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனுமசாகர் போலீசார் 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்