தேசிய செய்திகள்

மணிப்பூரில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூரில் போலீஸ் ஏட்டு ஒருவரின் வீட்டிலேயே போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினத்தந்தி

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் கிழக்கு மாவட்டம் எய்ரிக்போக் என்ற இடத்தில் போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கி வருவது தெரிய வந்தது. அந்த தொழிற்சாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட 400 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.90 கோடி ஆகும். போலீஸ் ஏட்டு ஒருவரின் வீட்டிலேயே அந்த தொழிற்சாலை இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த ஏட்டு உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை