கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அகர்தலா,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள தினாரம்பூர் பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அசாம் ரைபில்ஸ் படைப்பிரிவினர் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு பழைய குடோனில் மரிஜுவானா எனப்படும் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.1.92 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்