தேசிய செய்திகள்

மதுபோதை... இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்... தாறுமாறாக ஓடிய கார்- விபத்தில் 4 பேர் பலி

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

தினத்தந்தி

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து நேற்று ரோஷன் குமார், பவானி சிங் காரில் பார்மர் சென்றுகொண்டிருந்தனர். அந்த இளைஞர்கள் மது அருந்திவிட்டு அதி வேகமாக காரை ஓட்டியுள்ளனர். மேலும் காரை வேகமாக செலுத்துவதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளனர்.

தேவிகோட் மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்ற கலா மற்றும் அவரது மகன் மனிஷ் (வயது 13) மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனாலும் நிற்காமல் சென்ற கார் எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மது போதையில் காரை ஓட்டிய ரோஷன் குமார் மற்றும் பவானி சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்